ஏதா1ன்யபி1 து1 க1ர்மாணி ஸங்க3ம் த்1யக்1த்1வா ப2லானி ச1 |
க1ர்த1வ்யாநீ1தி1 மே பா1ர்த1 நிஶ்சி1த1ம் மத1முத்1த1மம் ||6||
ஏதானி--—இவை; அபி து--—நிச்சயமாக இருக்க வேண்டும்; கர்மாணி—--செயல்பாடுகள்; ஸங்கம்--—பற்றுதல்; த்யக்த்வா—---துறந்து; ஃபலனி—--வெகுமதிகளை;ச---மற்றும்; கர்தவ்யாநீ-—கடமையாகச் செய்ய வேண்டும்; இதி—அத்தகைய; மே----என்; பார்த----ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; நிஶ்சிதம்—நிச்சயமான; மதம்—---கருத்து; உத்தமம்-—உயர்ந்த.
BG 18.6: இந்த நடவடிக்கைகள் பற்றுதல் மற்றும் வெகுமதிகளை எதிர்பார்க்காமல் செய்யப்பட வேண்டும். இது என்னுடைய உறுதியான மற்றும் உயர்ந்த தீர்ப்பு, ஓ அர்ஜுனா.
ஏதா1ன்யபி1 து1 க1ர்மாணி ஸங்க3ம் த்1யக்1த்1வா ப2லானி ச1 |
க1ர்த1வ்யாநீ1தி1 மே பா1ர்த1 நிஶ்சி1த1ம் மத1முத்1த1மம் ||6||
இந்த நடவடிக்கைகள் பற்றுதல் மற்றும் வெகுமதிகளை எதிர்பார்க்காமல் செய்யப்பட வேண்டும். இது என்னுடைய உறுதியான மற்றும் உயர்ந்த தீர்ப்பு, ஓ அர்ஜுனா.
Sign in to save your favorite verses.
Sign In
Navigate directly to the wisdom you seek
Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
தியாகம், தானம், தவம் ஆகிய செயல்கள் ஒப்புயர்வற்ற கடவுளிடம் பக்தி உணர்வுடன் செய்யப்பட வேண்டும். அந்த விழிப்புணர்வை அடையவில்லை என்றால், அவர்கள் வெகுமதியின் மீது ஆசை இல்லாமல், ஒரு கடமையாகச் செய்ய வேண்டும். ஒரு தாய் தன் சந்ததிக்கு தன் கடமையைச் செய்ய தன் சுயநல மகிழ்ச்சியைக் கைவிடுகிறாள். அவள் தன் மார்பில் உள்ள பாலை தன் குழந்தைக்கு வழங்கி, குழந்தைக்கு ஊட்டமளிக்கிறாள். குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அவள் இழக்கவில்லை, மாறாக, அவள் தாய்மையை நிறைவேற்றுகிறாள். அதேபோல், ஒரு பசு நாள் முழுவதும் புல்வெளியில் புல் மேய்கிறது, ஆனால் அதன் மடியில் உள்ள பாலை தனது கன்றுக்கு அளிக்கிறது. பசு தன் கடமையைச் செய்வதன் மூலம் குறையாது; மறுபுறம், மக்கள் அதை அதிக மரியாதையுடன் நடத்துகிறார்கள். இந்த நடவடிக்கைகள் சுயநலமில்லாமல் செய்யப்படுவதால், புனிதமானதாக பார்க்கப்படுகிறது. புத்திசாலிகள் அதே தன்னலமற்ற மனப்பான்மையில் மங்களகரமான மற்றும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் கூறுகிறார். அவர் இப்போது பின்வரும் மூன்று வசனங்களில் மூன்று வகையான துறவுகளை விளக்குகிறார்.